Thursday, March 16, 2006

இந்திய மாயை! (Indian Myth)


இந்திய இலங்கை உடன்படி க்கை செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ் போராளிகளை சரணாகதியாக்குவதில் ஆதிக்க அரசுகள் வெற்றிபெற்று 10 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவும் இலங்கையும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் மீது விரும்பாததைத் திணித்து 10 வருடங்கள் ஆகின்றன.
இரண்டு ஆதிக்க அரசுகளும் தமிழ் மக்களை பகடைக் காய்களாக பாவித்து தமது நலன்களை அடைந்து 10 வருடங்கள் ஆகின்றன.இந்த 10 வருடங்களில் என்னவெல் லாமோ நடந்து முடிந்து விட்டன. குறிப்பாக புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஆயுதங்க ளைக் களைந்து, சரணடைந்து "ஜனநாயகவழி"க்கு வரவழைத்து விட்டு பின்னர் எதனையும் தராதுவிட்டது, இருந்ததையும் திருப்பி வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டமை, தமிழ், முஸ்லிம் மக்கள் வரலாறு காணாத அவலங்களை அனுபவித்து விட்டமை, இலங்கை அரசின் அட்டுழியங்களுக்கு போராளி இயக்கங்களே துணை போய்விட்டமை, சமாதானம், பேச்சுவார்த்தை, தீர்வு என்பவற்றின் பேரால் அரசின் போலியான தொடர் நடவடிக் கைகள், யுத்தம், அதை நியாயப்படுத்த புதிய புதிய கற்பிதங்கள் என்று இந்த 10 வருடகாலத்தில் நடந்து முடிந்தவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இத்தனைக்கும் பின்புலத் தில் இந்தியாவின் பாத்திரத்தை கூர்ந்து கவனிக்க தமிழ் சக்திகள் தவறிழைத்து வந்துள்ளனர். மீண்டும் மீண்டும் இந்தியாவை நாடிநிற்பதும், இந்தியாவை நம்பியிருப்பதுவும் தொடர்ந்தும் நிகழிந்து கொண்டு தான் இருக்கின்றன.இந்தியா யார்? அதன் குறுகிய கால நீண்ட கால நலன்கள் என்ன? அந்த நலன்களை அடைவதற்காக அது இது வரை மேற்குலக நாடுகளை கையாண் டது எப்படி? அயல்நாடுகளை நடத்தி யது எப்படி? அயல்நாடுகளை தனது நலன்களுக்காக ஈடுபடுத்துவதற்காக உள் முரண்பாடுகளை அது எப்படி கையாண்டு வந்தது? அவ்வாறான தலையீடுகளின் போது எந்தத் தரப்பின் நலன் முதன்மைப் படுத்தப்பட்டது? என்பன போன்ற கேள்விகளுக்கு தமிழ் சக்திகள் விடை காண தவறிவிட்டன என்றே கூறலாம்.
இந்தியா: பேட்டை ரவுடி
தென்னாசியப் பிராந்தியத்தில் சனத்தொகை, நிலப்பரப்பு, கைத்தொ ழில் வளர்ச்சி, இராணுவ வலிமை என்பவற்றில் இந்தியா ஒரு பெரிய நாடு. இதனால் பிராந்தியத்தில் ஆதிக்க வலிமை கொண்ட நாடாக திகழ்கிறது. இதனால் இந்தியாவின் இறுமாப்பும், திமிரும் அண்டை நாடுகளின் மத்தியில் அதனை ஒரு பேட்டை ரவுடியாக செயற்படச்செய்துள்ளது. இதன் காரணமாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் யுத்தம் புரியவும் நேரிட்டதுடன். சிக்கிம் என்ற நாட்டை விழுங்கி ஏப்பமும் விட்டது. நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளைத் தன்னில் தங்கியிருக்கச் செய்து அவற்றின் வெளியுறவுக் கொள்கையையும் கூட தாமே வரையறுக்கிறது. நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் உள் நாட்டு யுத்தங்களில் அரசுக்கெதிரான சக்திகளுக்கு உதவி செய்வதற்கூடாக அவ் அரசுகளுக்கு தொல்லையும் கொடுத்து வருகிறது.
பனிப்போர் காலகட்டத்தில் ரஷ்யாவுடனும் பனிப்போரின் பின்னைய (Post Cold War Period) காலகட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளையும் சார்ந்து இருக்கிறது. தனது பிராந்திய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளத்த யாராக இருக்கும் வரையில் அது வல்லரசு களுக்கு பணிந்து போவதில் பிரச்சினையி ல்லை என்று கருதுகிறது. இன்று அமெரிக்கா வுக்கும் மேற்குலகுக்கும் இந்தியா பணிந்து போவதையும் அப்படித்தான் பார்க்கலாம்.
இலங்கையின் இனப்பிரச்சினையா னது இந்தியா இலங்கையைக் கையாள நல்ல வாய்ப்பாகப் போனது. இலங்கை மேற்குலக வல்லரசுகளுக்கு முண்டு கொடுக்கின்ற காலங்களில் அதனை தடுத்து நிறுத்துவத ற்காக, இலங்கைக்கு நெருக்கடி கொடுப்ப தும், ஏனைய காலங்களில் நெருக்கடி கொடுக்கக்கூடிய சக்திகளை பலப்படுத்து வதும் இந்தியாவின் தந்திரோபாய நடவடிக்கையாக இருந்தது. இப்படியான காலங்களில் இலங்கை அரசுக்கு வழங்கக்கூடிய ஏனைய ஆதரவுகளை வழங்கி தனது "பெருந்தன்மை"யையும் "நட்பை"யும் அது வெளிப்படுத்தி வந்துள்ளது.
இந்தியாவின் கூட்டாளி
உதாரணத்திற்கு, மலையக மக்க ளின் குடியுரிமை பிரச்சினையானது இலங்கைக்கு ஒரு நெருக்கடியா, சரி, அதில் குறிப்பிட்ட சின்ன தொகையை ஏற்கலாம் என ஒப்பந்தம் (1964 சிறிமா-சாஸ்திரி, 1974 சிறிமா-இந்திரா) செய்து கொள்ளும். இந்த இடத்தில் (இந்தியாவு க்கும் பொறுப்பு உள்ள)மலையக மக்களின் நலனில் அக்கறையிருந்தால் குடியுரிமையற்ற ஏனையோரையும் பொறுப் பேற்பது இந்தியாவுக்கு ஒன்றும் சிக்கலான காரியமே அல்ல. ஆனால் இலங்கையை கையாள கருவிகளை எஞ்ச வைப்பதும் தயார்படுத்துவதும் இந்தியாவின் நீண்டகால நோக்கிலான தந்திரோபாயமாகும். அதேபோல் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்கவும், கச்சதீவை விட்டுக்கொடுக்கவும் இந்தியா தயார்.இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இலங்கையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியின் போதெ ல்லாம் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியுடன் நெருங் கிய நல்லுறவு நிலவும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக இரண்டும் முன்னைய ஏகாதிபத்திய விரோத மேலோட்டமான அர்த்தத்தில் சோஷலிச தன்மை சார்ந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றியவை என்பது முக்கியமானது. மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கும் இலங்கையில் ஐ.தே.க ஆட்சிக்கும் இடையில் நல்லுறவு இருந்தது கிடையாது. இதன் காரணமாகத்தான் இலங்கையின் 1977 ஐ.தே.க ஆட்சியமர் வும் அதனைத் தொடர்ந்து திறந்த பொருளாதாரக் கொள்கையின் அறிமுகம், மேற்குலகுடனான நல்லுறவுகள், அவற்றின் முதலீடுகள், தலையீடுகள் என்பன இந்தியா இலங்கை விடயத்தில் கூடிய அவதானம் கொள்ளச் செய்தது எனலாம்.
1977 தொடக்கம் இலங்கையின் இனப்பிரச்சினை தென்னாசியப் பிராந்தி யத்துக்கு அச்சுறுத்தலென்றும், தமிழ் மக்களில் தமக்கும் அக்கறையுண் டென்றும் கூறி இலங்கை அகதிகளை ஏற்கச்செய்ததும், (சில நேரங்களில் செயற்கையாகவே அகதிகள் வருகை யை தூண்டிவிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு) தமிழ் போராளிக ளுக்கு தஞ்சமளித்ததும் அவர்களது தளங் கள் இந்தியாவில் செயற்பட அனுமதி த்ததும் , ஆயுதங்களை வழங்கி யதும் ஆயுதப் பயிற்சிகள் அளித்ததும் அவதானிக்கத்தக்கவை. இதன் மூலம் பல "பிடி"களை தம்வசமாக்கியது.
இந்தியாவின் பிடியில் தமிழ் இயக்கங்கள்
விடுதலை இயக்கங்களுக்கு வழங்கிய ஆயுதங்களைக் கொண்டே இந்தியாவின் எதிர்ப்பார்ப்பை கணிக்கலாம். அவ் ஆயுதங்களைக் கொண்டு ரோந்து செல்லும் படையினரையும் காவலரண்களையும் மாத்திரமே தாக்க முடியும். பெரிய படை முகாம்களை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றவோ அல்லது அரசின் பாரிய படை படை நகர்வை முறியடிக்கவோ அல்லது ஒரு பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோ இவ்வாயுதங்களால் சாத்தியப்படாது. இந்தியாவுக்கு தேவைப் பட்டதெல்லாம். ஸ்ரீ லங்கா படையினரை ஆங்காங்கு தாக்கி தொல்லை கொடுப்பதற் கூடாக இலங்கையை வழிக்கு கொண்டு வருவதே.ஆயுதங்கள் விடயத்தில் இந்தி யாவை நம்பியிருக்காமல் சர்வதேச சந்தையில் ஆயுத கொள்வனவு செய்ய முயன்ற தமிழ் இயக்கங்களின் மீது பகைமை கொண்டது இந்தியா. சில இயக்கங்களுக்கென ஆயுதங்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்த போதே அவற்றை பறிமுதல் செய்தது.இந்திய அரசுடன் முரண்டு பிடிக்கின்ற காலகட்டங்களிலெல்லாம் இலங்கை அரசை தண்டிக்கும் விதத் தில் பாரியளவிலான தாக்குதல்களை நடத்துமாறு "றோ" இயக்கங்களை பணித்தது. குறிப்பாக அனுராதபுரம் பௌத்தமதத்தளங்களை தாக்கிய தும். கொழும்பில் அப்பாவி பொதுமக் களை இலக்காகக் கொண்டு பாரிய குண்டு வெடிப்புகளை நடத்துவது எல்லாம் இதன் தூண்டுதலின் காரணமாகவே நடந்ததாக பல போராளிகள் கூறுகின்றனர்.
இலங்கை தனக்கு பணிந்து போகும் காலகட்டங்களில் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு இயக்கங்களை தூண்டு வதும் ஏனைய காலங்களில் இயங்கங் களை தாக்குதல் நடத்தத் தூண்டுவ தும் அதற்காக தயார்படுத்துவதையும் செய்து வந்தது.
இப்படியாக இயக்கங்களை தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு போராட செய்வதும் பேச வைப்பதும், போராட வைப்பதும் பேசவைப்பதுமாக மாறி மாறி நகர்த்தியது.
இந்தோ-இலங்கை உடன்படிக்கை
இந்தியாவின் இந்த போக்கு கேள்விக் குறியாகும் நிலை 1987இல் ஏற்பட்டது. 1987 மே மாதம் இலங்கை அரசு வடமராட்சியை தனத பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் "ஒப்பரேஷன் லிபரேஷன்" இராணுவ நடவடிக்கையை மேற்கொண் டதுடன் பொருளாதாரத் தடையையும் விதித்தது. யாழ் நகரை கைப்பற்று மானால் இலங்கை அரசை நெருக்கி பணிய வைக்கும் பலம் குறைந்துவிடும் என்பதைக் கண்டு கொண்ட இந்திய அரசு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்தது. சர்வதேச அளவில் இலங்கை அரசு பெற்றிருந்த அவப்பெயர், தமிழக மக்களின் உணர்வலைகள் எல்லாமே தனக்கு சாதகமாக இருந்ததைக் கண்ட இந்தியா நேரடியாகவே தலையிட முடிவு செய்தது. பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரணம் எனும் பேரில் இலங்கை வான்பரப்பில் அத்துமீறி போர்விமானங்களுடன் வந்து உணவுப் பொட்டலங்களை போட்டதற்கூடாக "அடுத்ததும் நடக்கும்" என்று அச்சுறுத்தியது இந்தியா. இந்தியாவின் யோசனைக்கு இலங்கை பணிந்தது.தனது மூலோபாய நோக்கங்களை உடனடியாக நிறைவு செய்ய இதனை ஒரு சந்தர்ப்பமாக இந்தியா பயன்படுத்தியது. தமிழ் தலைமைகளின் அபிப்பிராயங்கள் எதனையும் கேட்கா மல் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கொண்டிராத ஒரு தீர்வை இந்தியாவும் இலங்கையும் தயாரித்தன. தயாரித்த பின்புதான் ஏனைய இயக்கங்களின் மீது அதனை திணிக்க முயன்றது. புலிகள் உட்பட ஏறக்குறைய எல்லா இயக்கங்களும் இந்த மூன்றாம் தரப்பின் நலன்களுக்கான ஒரு தீர்வுக்கு பலியானார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தமும் நடைபெற்றது.
இந்திய-இலங்கை நலன்கள்
இந்தியாவைப் பொறுத்தளவில் இலங்கையில் இந்தியாவின் நலன்க ளைப் பாதிக்கக் கூடிய வகையிலான வெளிநாட்டு இராணுவ, உளவுச் சேவைகள் செயற்படு வதோ, திருகோணமலை உட்பட வேறெந்த துறைமுகமோ வேறொரு நாட்டின் பாவனைக்கு ஈடுபடுத்துவதோ, வெளிநாட்டு ஒலிபரப்பு நிறுவனங்கள் இராணுவத் தேவைக்காக பாவிக்கப்ப டுவதோ இல்லை என்பன போன்ற விடயங்களை ஒப்பந்தத்தில் இலங்கை அரசிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இந்தக் காலப்பகுதியில் அமெரிக்கா "வொய்ஸ் ஒப் அமெரிக் கா"வை அமைக்கவும் எண்ணெய்க்குத பயன்படுத்தலுக்கும் முயற்சி செய்து வந்ததும் கவனிக்கத்தக்கது.அதே போல் இலங்கைக்கும் பல தேவைகள் இருந்தன. குறிப்பாக தமிழ் இயக்கங்கள் அனைத்தையும் நிராயுத பாணிகளாக்குவது இந்திய ஆதிக்க த்தை (ஆபத்தை) தணிப்பது, தென்னில ங்கையில் உக்கிரம் பெற்றிருந்த ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்க அவகாசம் பெறுவது, உலக அளவில் பெற்றிருந்த அவப்பெயரை நீக்கும் வகையில் "தீர்வை" வழங்கிவிட்டதாக வெளியுலகுக்கு காட்டுவது.இரு நாடுகளும் தமது நோக்கங்க ளில் வெற்றி பெற்றன. ஆனால் எதனை தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு இத்த னையும் நடந்ததோ அந்தப் பிரச்சி னைக்கு எந்தத் தீர்வும் கிட்டவில்லை. போதுமான அதிகாரமில்லாத ஒரு மாகாணசபையை ஆயுதங்களை களைந்துவிட்டு சரணாகதியடைந்த தமிழ் இயக்கங்கள் ஏற்றுக்கொண்டன. இந்த விடயத்தில் புலிகள் இயக்கம் பலியாகவில்லை என்றே கூறலாம்.
"அமைதிப்படையையும்" இந்தியா இறக்கியது. அதன் எண்ணிக்கையும், படைக்கலங்களும், இது அமைதிப்ப டையல்ல தேவைப்பட்டால் நசுக்கவுமே வந்துள்ளது என்பதை உணர்த்தியது.இயக்கங்களை நிராயுதபாணிகளா க்குவதில் காட்டிய ஆர்வத்தை ஒப்பந்தத்தின் மூலம் வழங்குவதாகக் கூறிய அரைகுறை தீர்வுகளைக் கூட நடைமுறைப்படுத்த இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவற்றை நிறைவேற் றும்படி பல போராட்டங்கள் உண்ணாவிரத ங்கள் நடந்தன. புலிகளின் அங்கத்த வர் திலீபனும் மட்டக்களப்பில் அன்ன பூரணி எனும் பெண்ணும் உண்ணாவி ரதத்தில் உயிர் நீத்தனர்.
தட்டிக்கேட்க யாருமில்லை
ஆரம்பத்தில் உலகிலேயே நான்கா வது பெரிய படையுடன் மோதி வெற்றி பெறமுடியாது என கருதியதால் பணிந்து போன புலிகள் கூட அடுத்தடு த்து நடைபெற்ற கசப்பான நிகழ்வுக ளினால் இந்தியப்படையை எதிர்த்து போரிடாவிட்டாலும் தாம் அழிந்து போக நேரிடுமென்பதை உணர்ந்தனர். புலிகளுக்கும் "அமைதிப்படை"க்கும் இடையில் போர் நடந்தது. அதற்கு முன்னர். இலங்கைப்படையினரால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைகளையும் விட அகோரமான தாக, மூர்க்க மானதாக இந்தியப்ப படையினரின் நடவடிக்கைகள் இருந் தன. இலங்கை அரசு அதற்கு முன், ஓரளவு எச்சரிக்கையுனேயே இவ்வகை அட்டுழியங்களைச் செய்தது. ஏனெனில் இந்தியா அதனையே பெரும் பிரச்சார மாக சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுவிட்டிருக்கும் என இலங்கை கருதியிருந்தது. ஆனால் இந்தியப் படைகளே நேரடியாக களத்தில் இருந்ததால் எதிர் விளைவுகள் பற்றிய எந்த தயக்கமும் இன்றி போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி குண்டு மழை பொழிந்து ஈவிரக்கமின்றி தமிழ் மக்களை கொன்றொழித்தது.பல பெண்கள் பாலியல் வல்லுறவு க்கு உள்ளானார்கள். முன்னெப்போ தையும் விட அதிகளவு உயிர், உடமை, சொத்துக்களின் இழப்பு காணப்பட்டது. இதனைத்தான் அன்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று IPKF என்பதை Innocent People Killing Force என்றது. வேறும் சில பத்திரிகைகள் Indian Peace Killing Force என்றன.
இதற்கிடையில் இந்தியாவிலும் இலங்கையிலும் முறையே வி.பி.சிங்கும், பிரேமதாசவும் ஆட்சியலமர்ந்தனர். பிரேமதாசவுக்கு தேர்தல் வாக்குறுதிக ளில் ஒன்றான "இந்தியப்படையை வெளியேற்றுவது" என்பதை நிறை வேற்ற வேண்டியி ருந்தது. அதன்படி புலிகளுடன் பேச்சுவார் த்தையை ஆரம்பித்ததுடன் இந்தியப் படையை "வெளியே போ!" என்றார். இந்தியா மிகவும் கோபமடைந்திருந்த நிலையில் வரதராஜப்பெருமாளைக் கொண்டு தமிழீழப் பிரகடனமும் செய்யப்பண்ணி பிரச்சினையை வேறுபக்கமாக திருப்பி மேலும் சிக்கலா க்கிவிட்டு இந்தியப் படை வெளியேறியது. மாகாண சபையும் கலைக்கப்பட்டது. சரதராஜப் பெருமாளையும் கூடவே கூட்டிச்சென்று விட்டது இந்தியா.
இந்தியப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்காகவே உருவான பிரேமதாச-புலிகள் கூட்டு இந்தியப் படை வெளியேறியதைத் தொடர்ந்து அவசியமற் றதாகியது.இவ்வாறு இந்திய நலனையே முதன்மயாகக் கொண்ட இவ்வுடன்படிக்கை குறித்தும் 13வது திருத்தச்சட்டம் குறித்தும் இன்றும் தமிழ் இயக்கங்கள் நம்பிக்கை வைத்திருப்பதுதான் வேடிக்கை. சில இயக்கங்கள் தமது ஆயுதங்களைக் களைந்தமை குறித்து இன்றும் கவலைப்படுவதை காணமுடிகிறது.இந்தியா குறித்து நிலவுகின்ற மாயை இரண்டு வகையானது. முதலா வது வகை, இந்தியா தமிழ் மக்களில் அக்கறையுள்ளது. தமிழக மக்களின் அக்கறைக்காக இலங்கை தமிழரிலும் அதற்கு அக்கறையுண்டு, தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரானது. தேவைப்பட்டால் தலை யிடும், உணவு அனுப்பும், அகதிகளை ஏற்கும், பராமரிக்கும், ஆயுதங்களை வழங்கும் பயிற்சி வழங்கும்... என இந்தியாவில் அதீத நம்பிக்கை கொண்ட மாயை.
அடுத்த மாயையானது இந்தியாவை மீறி எதனையும் செய்யமுடியாது என்பதாகும். அது உலகின் நான்காவது பெரும் படை, ஒரு வல்லரசு, பிராந்தி யத்தின் ஏகபோக சண்டியன். எந்த நேரத்திலும் இந்தியா எனும் பாறை சிறு எறும்பின் மீது விழுந்து நசுக்கி விடும். ஆகவே அதை மீறி எதையும் செய்யமுடியாது அதன் ஆதரவு கட்டாயம் தேவை. அது சொல்வ தைக் கேட்டு நடப்போம் என்பதே.
இரண்டு போக்குமே அபாயகரமானது. இந்தியாவை மையப்படுத்தி பிரச்சினையை பார்க்கும் போக்கு அபத்தமானது. ஒடுக்கு முறை, ஒடுக்கு முறை கருவிகள், என்பவற்றி லிருந்து பாதுகாப்பது, உரிமை பெறுவது எப்படி என்கின்ற மூலோபாயங்களிலிருந்து கொண்டு அவற்றை கையாள்வது தொடர்பான தந்திரோபாய நிலையை எட்டுவதே இலக்கை அடைய வழிசெய்யும். மாறாக ஒடுக்குமுறை சக்திகளைக் கண்டு அதீத பீதி கொள்வதோ அதீத நம்பிக்கை கொள்வதோ அவற்றின் தந்திரோபாயங்க ளுக்கு பலியாவதில் போய் தான் முடியும்.
ஏற்கெனவே இந்த வரலாற்றை பல தடவை படித்துவிட்டோம். இன்னும் தொடர்ந்து புதிதுபுதிதாக படிக்கத்தான் வேண்டுமா?
-மலர்விழி
(இதழ்-126-யூலை-97)
மேலும் வாசிக்க...

Friday, February 03, 2006

போரின் கருவியாக பாலியல் வல்லுறவு


என்.சரவணன்

ஸ்ரீலங்கா அரசின் சிங்கள இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புப் போரில் பொது மக்களை ஏமாற்றி மசிய வைக்க ஒரு தடவை பேச்சுவார்த்தை சமாதான நாடகமாடியது. உலக நாடுகளை தம்பக்கம் ஈர்ப்பதற்காக தீர்வுப் பொதி நாடகம் ஆடியது. இன்று சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பின் தமிழ் மக்கள் குறித்தும் வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இந்தப் பேரினவாதக் கட்டமைப்பை வளர்த்தெடுக்க எந்த ஆதிக்க சக்திகள் காரணமாக இருந்தனவோ இன்று அதே சக்தியானது ஆதிக்க விரும்பினாலும் கூட தான் வளர்த்துவிட்டுள்ள கட்டமைப்பு அப்படிப்பட்ட ஒரு தீர்வுக்கு ஆதரவு தரப்போவதில்லை என்பதையும், அது ஆதிக்க சக்திகளின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்பதும் அம்பலப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமாதான முயற்சி, பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம், தீர்வு என்பவற்றை எதிர்க்க சிவில் சமூகமே தயாராகி வருவதை தென்னிலங்கையின் அண்மைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு விரும்பியோ விரும்பாமலோ தனது இருப்புக்காக போரை நடத்தியேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும் முகம் கொடுக்க சிவில் சமூகம் பழக்கப்பட்டு-பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், பொருள் விலையுயர்வு, தீர்வைகளின் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் என்பவற்றைக் கூட போரின் பேரால் நியாயப்படுத்துவதை எதிர்த்து பெரிய எதிர்ப்பு "நடவடிக்கைகள்" எதுவும் இல்லை.
அரசின் அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றாகவே இன்று போர் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட் நிலையில் தான் போரின் எதிர் விளைவுகளை சந்திப்பதாயிருந்தால் படையினரை உற்சாகப்படுத்தியே ஆக வேண்டும். படையினரின் உயிரிழப்புகள், படையின் ஏனைய பொருளிழப்புகள், முகாம் இழப்புகள் எனபனவற்றால் படையிலிருந்து வெளியேறுவோரின் தொகை அதிகரித்து வருகின்ற அதே நேரம் புதிதாக சேருவோரின் தொகை குறைந்துக் கொண்டே வருகிறது. தென்னிலங்கையில் வீடுகளில் பெற்றோரை மிரட்டுகின்ற பேச்சாகவே "படையில் போய் சேர்ந்து விடுவேன்" என்பதைக் காண முடிகிறது.
இந்த நிலையில் உள்ள படையினரை தொடர்ந்து தக்க வைக்கவும், புதிதாக படைக்குச் சேருவதை ஊக்குவிக்கவும் பல வழிமுறைகைளைக் கையாள்கிறது. படையில் இணைவோருக்கான சம்பள, சலுகைகள் அதிகரிப்பு அவற்றில் முக்கியமானவை. இது போன்ற வழிமுறைகளில் ஒன்றே படையினரின் போர்க்கால குற்றங்களை பொருட்படுத்தாமை என்பது.
அந்த போர்க்கால குற்றங்களில் பாரிய ஒன்றாக தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான பொருண்மைகள் உள்ளன.
இதற்கான உள்ளார்ந்த அனுமதி படையில் இருப்பதை நிலைமைகள் வெளிக்காட்டியுள்ளன. இது பெரியளவில் பிரச்சாரப்படாமல் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைப்பாடு படையில் இருப்பதையே காட்டுகிறது.
1994இல் பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் அதே ஆண்டு இறுதியிலிருந்து நடத்திய பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்ரலில் முறிவடைந்தது. 1995 ஒக்டோபரில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ் குடா நாட்டைக் கைப்பற்றிய அரசாங்கம் அது தொடக்கம் யாழ் குடா நாட்டை ஒரு மூடுண்ட பிரதேசமாகவே ஆக்கி வந்தது. வெளியுலகத்துக்கு அங்கு இராணுவத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை நடாத்தி வருவதாகவும் பிரச்சாரப்படுத்தியும் வந்தது.
போரினால் அரசு சந்தித்து வந்த தொடர் தோல்விகளினால் படையினரின் உளநிலை வீழ்ச்சி கண்டிருந்தது. இதேவேளை மூடுண்ட பிரதேசமாக இருந்த யாழ் குடா நாட்டில் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனோர்கள். அடிக்கடி ஆங்காங்கு சடலங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன.
மனித உரிமைகள் அமைப்புகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு மாத்திரம் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்த போது அதனை முறையாக எதிர்கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் படையினராலேயே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை.
பொதுவாக போர்க்காலங்களில் இந்த பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்ளாக்க எதிரித் தரப்பு நம்புவது வழக்கம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம் அண்மைய பொஸ்னிய-சேர்பிய போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்தின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமானால் அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு கொண்டு இனக்கலப்பு செய்து விட்டால் அது நடக்கும் என சேர்பியர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்களுக்கென்று தனியான முகாமமைத்து அவர்களை சேர்பியர்கள் சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி அவர்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற வைத்தனர். பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலி செய்தனர். நூற்றுக் கணக்கான பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. இந்த இனக்கலப்புக்கூடாக அவ்வினத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டதாகவும், களங்கப் படுத்தி விட்டதாகவும், புனிதம் கெடச் செய்து விட்டதாகவும் பொஸ்னியர்களுக்கு அறிவித்தார்கள்.
இப்படி யுத்த காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் படையினருக்கு விருந்தாக ஆக்கப்படுவதும் பலருக்கான பாலியல் போகப்பொருளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவதும் அங்கு மட்டுமல்ல இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் புரிந்த கொடுமையும் இவை தான். அவை நீண்ட காலமாக வெளித் தெரியாமல் இருந்து மிக அண்மையில் தான் பெண்களை பாலியல் அடிமைகளாக முகாம்களில் வைத்திருந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்தோனேசிய, பிலிப்பைன்ஸ், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பெண்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டு படையினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த சம்பவங்கள் உலகையே உலுக்கியது.
எதிரி நாட்டுப் படையினர் மீது நடத்தப்பட்டு வந்த இத்தகைய மனிதநேயமற்ற சம்பவங்களே இலங்கையிலும் நடந்து வருகின்றன.
அண்மையில் கூட இந்தோனேசியாவில் சுகர்னோ அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியின் போது சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட செய்தி இன்று உலகப்புகழ் பெற்றவை.
இன்று நடக்கும் யுத்தம் எதிரி நாட்டுடனான யுத்தமென்பதையும் தமிழ்ப் பெண்கள் தங்கள் நாட்டுப் பெண்களில்லை வேற்று நாட்டுப் பெண்களே என்பதையும் தெளிவுறுத்தியது இதே அரச படை தான். இராணுவத்தின் ஆட்சேர்ப்பு தமிழ் மக்கள் மட்டும் தேடி வேட்டையாடப்படல் என்பவற்றின் வெளிப்பாடுகள் அத்தனையும் இது சிங்களப் படை தான் என்பதை நிரூபித்தது. எனவே ஸ்ரீ லங்கா அரச படையும் வேற்று நாட்டுப் படையெனும் உணர்வும், ஆக்கிரமிப்பு இராணுவம், எதிரிப் படை என்கின்ற மனப்பதிவுக்கும் தமிழ் மக்கள் உள்ளாகினர்.
ஸ்ரீ லங்கா படையை அப்படி சிங்களப் படை, எதிரிப் படையென்று சொல்வதற்கு முழுத் தகுதியையும் அடைந்திருக்கிறது.
(சிங்களப் படையென்ற சொல் இனவாதத்தை வெளிப்படுத்துவதாக சொல்கிறார்கள் ஆனால் சிங்களவர்களை மட்டுமே கொண்ட படையாகவும் எதிரிநாட்டின் மீது யுத்தம் செய்வது போல யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவதாலும் இப்பதம் பொறுத்தமானதே)
எனவே இப்படிப்பட்ட சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமானப்படுத்த பயன்படுத்துகின்ற ஒன்றாகவே கொள்ள முடிகிறது.
ஆனால் தற்செயலாக கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரையும் கொன்று புதைத்த சம்பவம் தற்செயலாக அம்பலத்துக்கு வந்ததும் (கிருஷாந்தி குடும்பத்தின் வர்க்கப்பின்னணி காரணமாக அதற்கு தொடர்புசாதனங்கள், பெண்கள் அமைப்புகள், சட்ட உதவிகள் வாய்;ப்பாக அமைந்ததால்) அது உலக அளவில் அரசை அம்பலத்துக்கு கொண்டு வந்தது.
தவிர்க்க இயலாமல் இதனைப் பயன்படுத்தி அரசு போர்க் குற்றங்களுக்கு எதிராக எப்போதும் இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதற்காக கிருஷாந்தி வழக்குக்கு அரச முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. அதன்படி 20 மாதங்களாக நடந்த கிருஷாந்தி வழக்கின் தீர்ப்பாக 6 பொலிஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதைச் சொல்லியே அரசு இன்றும், பாதிக்கப்படும் பெண்கள் மீதான தனது கரிசனையை பிரச்சாரப்படுத்தி வருகிறது. இந்த பிரச்சாரங்களின் முன்னால் ஏனைய சம்பவங்கள் அனைத்தையும் மூடி மறைத்து வருகிறது. ஏனைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சமூக அளவிலும் அந்தஸ்துடையவர்கள் அல்லர்.
இன்று வெளிக் கொணரப்படுகின்ற சம்பவங்கள் அனைத்துமே பாதிக்கப்பட்ட பெண் செத்தால் மாத்திரம் தான் சாத்தியமாகிறது. பெண்ணியவாதியான ஷாமினி பெர்ணாண்டோ இது குறித்து கருத்து தெரிவிக்கையில் "ஒரு பெண் படையினரால் தனக்கு ஏற்பட்ட அவலத்தை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டுமெனில் நிச்சயம் சாகத்தான் வேண்டுமா," என வினவுகிறார். உண்மையில் இன்று வழக்கு தொடரப்பட்டிருக்கும் சொற்ப சம்பவங்களைத் தேடிப்பார்த்தால் அவை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டவர் குறித்தானதாகத் தான் இருக்கின்றது. கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி போன்றன நல்ல உதாரணங்கள்.
இதே வேளை இது வரை சிங்களப் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்கிற பாலியல் வல்லறவு சம்பவங்கள் அனைத்திலும் பெண் அதிக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளாள்.
97 ஒக்டோபர் 16 அன்று அம்பாறையில் பொலிஸாரும் படையினரும் தங்கநாயகி எனும் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டு விட்டு அப்பெண்ணின் பெண்குறியை வெட்டி சின்னாபின்னப்படுத்தி விட்டே சென்றனர். அதே போல 97 மே 17 அம்பாறையில் கோணேஸ்வரி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கோணேஸ்வரியின் பெண்குறியில் கிரனைட் வைத்து தகர்த்தனர். பெரும்பாலும் பாலியல் வல்லறவின் பின் கொலையும் செய்து வந்திருக்கின்றனர். இதன் மூலம் சகல சாட்சிகளையும் இல்லாது போய்விடுமென்றே சிங்களப் படையினர் கருதியிருப்பர்.
இதை விட இது வரை காலம் போரின் போது கைது செய்யப்பட்ட பெண் புலிகள் பலரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டமை குறித்த சம்பவங்கள் 94க்கு முன்னர் அதிகளவு தகவல் கிடைத்திருந்தன. இன்று அப்படிப்பட்ட தகவல்கள் பெறுவது கடினமாக இருக்கிறது. ஆனால் உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலுறுப்புகளில் போத்தல்களாலும், கம்பிகளாலும் சேதப்படுத்துகின்ற புகைப்படங்களின் மூலம் கடந்த அரசாங்கங்களைப் போலவே இந்த அரசாங்கத்திலும் இடம் பெற்று வருவதை காண முடிகிறது. குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் முடிந்ததும் மரணமுற்ற பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டதை தொலைக்காட்சி செய்திகளிலும் காட்டப்பட்டது. அவை பற்றிய புகைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.
இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்ன? குறிப்பிட்ட சமூகத்தை அவமானப்படுத்தி விட்டதன் களிப்பையல்லவா? ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்டாத இன்னொருவரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அவருக்கு கிட்டிய பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்குவேன் என்று கூறினாலே மற்றவர் ஆத்திரப்படுவார் அல்லவா? அப்படிப்பட்ட வெளிப்பாடொன்றே இந்த நிர்வாணக் காட்சிப்படுத்தலும்.
"தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும்" சமாதான யுத்தத்தின் மறு பக்கம் எவ்வளவு கோரமானது என்பதைக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் போதுமானது. அரசாங்கத்தின் சர்வதேச பிரச்சாரங்கள் சமீப காலமாக தோல்வியடைவதற்கு ஒரு காரணம் போர்க்கால கொடுமைகளின் அத்தனை விபரீதங்களும் எல்லைத்தாண்டி போகுமளவுக்கு அதிகரித்திருப்பதே.
அரசு இவ்வாறான இம்சைகளின் வாயிலாக தமிழ் மக்களை பணிய வைத்து அரசு தரும் தீர்வினை ஏற்கச் செய்கின்ற நடவடிக்கையாக, போரின் கருவியாக, வதையின் கருவியாக, பாலியல் வல்லுறவு தொடர்ச்சியாக பாவிக்கப்பட்டு வருகிறது. அரச பயங்கரவாதத்தின் உச்ச வடிவம் இது தான். இது இனிமேல் தொடராது என்பதற்கான உறுதியை எவரும் தந்துவிடமாட்டார்கள்.
(பாலியல் வல்லுறவுக்குள்; பட்டியல்களும் இப்பத்திரிகையில் அடங்கியுள்ளன.)
மேலும் வாசிக்க...

Thursday, February 02, 2006

தமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும்


-என்.சரவணன்

இன்று தென்னிலங்கையில் எவர் விரும்புகிற அல்லது விரும்பாத போதும் ''தமிழீழம்"" என்கின்ற அரசாங்கம் ஒன்று இயங்கி வருவதை நாம் அறிகிறோம். அந்த அரசாங்கம் அரசாக (State) இன்னும் ஆகவில்லை என்பதும் உண்மை. எவ்வாறாயினும் வடக்கில் எழுதப்படாத அரசியலமைப் பொன்று நடைமுறையில் இருக்கத் தான் செய்கிறது. அந்த எடுகோளிலிருந்து வடக்கில் அமுலாக்கப்பட்டிருக்கிற சட்டங்களை அலசிப்பார்ப்பது அவசியமானதொன்றே. அந்த வகை யில் ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்"" (Pநநெட ஊழனந ழக வுயஅடை நுயடயஅ) ('தண்டனை' இங்கு ''ஒறுப்பு"' என அழைக்கப்படுகிறது.) முக்கியமான ஒன்று. அச்சட்டத்தில் பெண்களது உரிமை பேணப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அதில் பெண்களுக்கான உரிமை பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டம் ஆக்கப் பட்டிருக்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கிறதா? என்ற வினாவை ஒரு சிலர் எழுப்பக்கூடும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது பொன்மொழிகள் என சொல்லப்படுப வையோடு இது எத்தனை தூரம் பொருந்துகிறது என்கின்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இது பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. வே.பிரபாகரன் சொன்னதை இங்கு நோக்குவோம்.
'பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறையில் இருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் -தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன்" (ஆதாரம்:- நாற்று-2வது இதழ்-மாறன் பதிப்பகம், பக்கம்-6, தமிழீழ பெண்கள் ஆய்வு நிலையம்)
''ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஆண்களு க்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்." (அதே நூல்-பக்கம்-31)
''பெண் விடுதலை என்பது அரச ஒடுக்குமுறையில் இருந்தும் சமூக ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளா தாரச் சுரண்டல் முறையிலிருந்தும் விடுதலை பெறுவதேயாகும்." (அதே நூல்- பக்கம்-35)
நடைமுறையில் உலகமெங்கும் சகல ஆட்சி நிர்வாக துறைகளிலும் ஆண்களது செல்வாககும் மேலாதிக்க முமே நிறைந்து காணப்படுவதை எவரும் அறிவர். சட்டமியற்றுதல், அதனை பிரயோகித்தல், என்பனவற்றைக் கூட ஆண்களே மேற்கொள்கின்றனர். எனவே ஆண்நிலைப்பட்ட ஆணாதிக்க தீர்மாணங்களும், முடிவுக ளுமே பொதுவாக பெண்கள்மேல் திணிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தொடர்பான மரபு ரீதியான கருத்தியல் சிந்தனையிலிருந்து வெளிவரும் சட்டங்களினால் பெண்கள் பல்வேறு முறைகளில் பாதிப்புக்குள்ளாகி வருவது சர்வசாதாரண நிகழ்வாகியு ள்ளது. அந்த எடுகோளுடன் பார்த்தால் 'தமிழீழ ஒறுப்புச் சட்டம்" கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல. இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
தண்டனை
தண்டனைக்குரிய பதமாக தமிழீழ ஒறுப்புச் சட்டத்தில் "ஒறுப்பு" எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இந்த தண்டனை விடயத்தில் எவருக்கெல் லாம் தண்டனை விதிக்கப்படல் வேண்டும் எனும் வறையறைக்குள் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது.
''குற்றவாளியாகக் காணப்படும் காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு எதிராக மரண தண்டணை விதிக்க ப்படலோ, பதியப்படலோ ஆகாது. ஆனால் அதற்கு மாறாக கடுஞ்சிறை யொறுப்போ எளிய சிறையொறுப்போ வழங்கலாம்" (பார்க்க-Pஊவுநு-சரத்து-47)
கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என சொல்லப்பட்டது சரி. ஆனால் கருவுற்றிருக்கிற பெண்ணுக்கு கடுஞ்சிறையொறுப்பு வழங்கலாம் என்ற விடயம் பாரதூரமானது. "கடுஞ்சிறையொறுப்பு" என்பதன் அர்த்தம் கடுமையான உடல் உழைப்போடு கூடிய தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க-Pஊவுநு-சரத்து-45.ஆ(1)).
ஏற்கனவே கருவளச் சுமை பெண்ணிடம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் "கடும் உடலுழைப்பு" என்பது மிகவும் மோசகர மான தண்டனையாகவே கொள்ள முடியும்.
அது தவிர அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மாத்திரமல்லாது கருவுற்றிருக்கும் அப்பெண்ணின் கருவளத்திற்கும் ஏற்படுத்தும் உடல், உள ரீதியிலான தண்டனையாகவே இதனைக் கொள்ள முடியும்.
எனவே, செய்த குற்றத்திற்கான தண்டனையாக எளிய சிறையொறுப்பு போதுமானதெனலாம் அதிலும் கருவுற் றிருக்கிற நிலையில் சிறைக்குள் அவளது செயற்பாடுகளுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.
கருக்கலைப்பு
கருக்கலைப்பு சுதந்திரமென்பது ஒவ்வொரு பெண்ணினதும் முக்கியமான ஒன்றாதல் வேண்டும்.
ஒறுப்புச் சட்டத்திலும் இது விடயத்தில் பிழையான அணுகு முறைகளையே காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக:
உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம் அல்லாது போனால் 3 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய எவ்வகை சிறையொறுப்பும் வழங்கலாம். அப்பெண் உயிர்ப்புடன் துடிக்கும் கருவினை உடையவராக இருந்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையுடன் குற்றக் காசிறுப்புக்கும் ஆளாதல் வேண்டும் என சொல்லப்பட் டுள்ளது. (Pஊவுநு -சரத்து-215)
சகல பெண்களும் விரும்பித்தான் கருவுறுகின்றனர் என்று கொள்ளவும் முடியாது. பாலியல் வல்லுறவுக்கூடாகவும், அவள் கருவைத் தாங்க நேரிடக்கூடும்;. (அது குடும்பத்தில் கனவனால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவாகவும் இருக்கலாம்.) உற்ற கருவை கலைக்க முடியாமலும் போயிருக்கலாம். பாலியல் வல்லுறவு, அடிப்படையாக அமைந்தால் கருக்க லைப்பு செய்வதில் தவறில்லை என அதே சரத்தில் "புறநடை விலக்கு" எனும் பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. என்ற போதும் 'புறநடை விலக்கு" (2) இல் கருக்கலைப்பு செய்வதானால் ஆணினதும் 'இசைவு" தேவை என கூறப்பட்டுள்ளது.
கருவை சுமக்கும் பெண்ணிடம்தான் கருவை சுமக்கும் சம்மதம் பற்றிக் கேட்டறிய வேண்டுமேயொழிய கனவ னது இசைவை அங்கு வலியுறுத்துவது பாரதூரமானது. பெண் விரும்பாத போதும் ஆணின் நிர்ப்பந்தத்தால் இப்படி நடப்பதுவுமுண்டு. அதாவது கருவை சுமப்பவள், தான் விரும்பாத போதும் ஆணின் கட்டாய ஆணையின் பேரில் அதனை சுமக்க வேண்டும் என இதன் மூலம் மறைமுகமாக நிர்ப்பந்திக் கப்படுகிறது. அது மட்டுமன்றி ஆணாதி க்க திணிப்புச் சூழலும் பெண்ணடிமை கருத்தியற் சமூக அமைப்பும் இன்று "பாலியல் வல்லுறவு" என்பதை புறநிலையிலேயே கொள்கிறது. மனைவி விரும்பாத போதும் கனவனால் கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளாகும் வழமையான இயல்பு நிலையை பாலியல் வல்லுறவாக கொள்ளும் நிலை பல நாட்டு சட்டங்களில் இல்லை. எனவே இப்படியான சூழ்நிலையில் கருவை சுமத்தல் அல்லது கலைத்தல் தொடர்பான உரிமைகளை பெண்ணி டமே விட்டுவிட வேண்டும்.
கருக்கலைப்பு விடயத்தில் சில வேளை புலிகள் இயக்கத்தினர் தங்களது போர்க்கால மனித வள திரட்டலுக்கான (நீண்ட கால நோக் கைக் கொண்ட) - தந்திரோபாயமாக இதனைக் கொண்டிருக்கக் கூடும். என்ற போதும் போராட்டத்திற்கான பயன்படு த்தலுக்கு மாத்திரம் பெண்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயம் பரவுவதற்கும் இது வழிவகுக்கிறது.
மறுமணம்
"மறுமணம்" விடயத்தில் அது இப்படிக் கூறுகிறது. ''துணைவனோ, துணைவியோ உயிருடன் இருக்கும் போது அல்லது விவாகரத்து நடவாதிருக்கும் போது அவர்களில் எவரும் மறுமணம் செய்யக்கூடாதெ ன்றும் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க வேண்டும். (Pஊவுநு-சரத்து 273) எனக் கூறப்பட்டி ருக்கிற போதும் அதன் 'புறநடை" பகுதியில் திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவ னைப் பற்றியோ தகவல் எதுவுமில்லா மலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டுமென நிர்ப்பந்திக்கிறது.
திருமணமான எவரும் துணைவி யைப் பற்றியோ துணைவனைப் பற்றி யோ தகவல் எதுவுமில்லாமலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டு மென நிர்ப்பந்திக்கிறது.
திருமண கட்டமைப்பு என்பதே அது ஆண், பெண் ஆகிய இரு சாராரினதும் சகல சுதந்திரங்களையும் கட்டுப்ப டுத்தும் நிறுவனம் என்பது அறிந்ததே. பெரும்பாலும் திருமண கட்டமைப்பி னால் ஆணைவிட பெண், அதிக பாதிப் புக்குள்ளாகிறாள் என்பது இன்னொரு விடயம். இந்நிலையில் மேலே குறிப்பிட் டுள்ள 'காத்திருக்கும் வரையறை" என்பது அத்தியாவசியமானதென கருதமுடியாது.
பாலியல் வல்லுறவு
பாலியல் வல்லுறவு குறித்து பல விடயங்களை நல்ல முறையில் அணுகியிருக்கிற போதும் ஆங்காங்கு சில பலவீனங்களைக் காண முடிகிறது.
"பாலியல் வல்லுறவு குற்றம்" புரிந்த ஒருவருக்கு மரண தண்டனையோ அல்லது 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் கூடிய குற்றக்கா சிறுப்போ விதிக்கப்படுமென கூறுகிறது. (Pஊவுநு -சரத்து-279-(அ)) குற்றம் புரிந்தவர் 24 வயதையடையாதவராக இருப்பின் தண்டனையைக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, என்ற போதும் 'பாலியல் வல்லுறவு" பற்றிய குற்ற வழக்கானது, அத்தவறு இழைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குப் பின் தொடரப்படலாகாது எனக் கூறப்பட்டு ள்ளது. (Pஊவுநு -சரத்து-283-(4)) சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ முதல் மூன்று மாதங்களுக்குள் வழக்கு தொடர முடியாமல் போனவர்களுக்கு நீதித்துறை நீதி வழங்க முடியாது என கூறுவது சரியான ஒன்றல்ல.
இச்சட்டத்தில் "பாலியல் வல்லுறவு", "பாலியல் வன்முறை" இரண்டுக்கும் வௌ;வேறு அர்த்தங்கள் காட்டப்பட்டி ருக்கிறது. அந்த வரையறை இதுவரை வேறு யாரும் செய்யாத ஒன்று என்ற ரீதியில் தமிழீழ ஒறுப்புச் சட்டத்திற்கு பெருமையுண்டு. உதாரணத்திற்கு,
''ஆண் குறியை சிறிதளவு பெண்குறியினுள் நுழைத்தாலும் "பாலியல் வல்லுறவு"' நடைபெற்றதாகக் கொள்ளப்படும்" என்றிருக்கிறது.
''பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளது பாலியல் உறுப்புக்களில் பாலியல் உணர்வுடன் அல்லது அவரை இழிவு படுத்தும் நோக்குடன் தீண்டுவது "பாலியல் வன்முறை"த் தவறாகும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
என்றாலும் இது தொடர்பாக ஒறுப்புச் சட்டத்திலுள்ள பலவீனமென்ன வென்றால் மேற்படி வரையறையிலிருந்து "பாலியல் வல்லுறவு" மற்றும் பாலியல் வன்முறை" ஆகியன ஆணொ ருவன் ஆண் மீது அல்லது பெண் பெண் மீது பிரயோகிக்கப்படும் 'பாலியல் வல்லுறவு"களையும் பாலியல் வன்முறைகளையும் கண்டும் காணாது விடுவதா என்ற கேள்வி எழுகின்றது. மேலும் இன்று குடும்பங்களில் கணவ னால் மேற்கொள்ளப்படுகின்ற பலாத்கார பாலியல் உறவுகளையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம். சமூக யதார்த்த நிலையில் பெண், ஆண்மீது பாலியல் பலாத்காரம் பண்ணுமளவு நிலைமை இல்லை என்பதை நாமறிவோம். சில வேளை இது மிக அபூர்வமாகவே இடம் பெறும். ஆனால் ஆண், ஆண் மீது இக்குற்ற த்தை இழைப்பது இன்று சாதாரணமாகி வருவதை நடைமுறையில் அறிய முடிகிறது.
இதை விட "பாலியல் வல்லுறவு" (சுயிந) மற்றும் "பாலியல் வன்முறை" (ளுநஒரயட ஏழைடநnஉந) என்பதைப் போலவே 'பாலியல் தொந்தரவுகள்" (ளுநஒரயட னுளைவரசடியnஉந) என்ற ஒன்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. குறிப்பாக பாலியல் வக்கிர நோக்கில் தீண்டுவது, இழி சொற்களைப் பயன்படுத்துவது, மற்றும் தொடர்பு சாதனங்கள், கலை வடிவங்களுக்கூடாக பாலியல் ரீதியிலான இழிவுகளைப் பிரதிபலிக்கச் செய்தல். அசிங்கப்படுத்திக் காட்டுதல் என்பவற்றை வேறு படுத்தி இனங்காண வேண்டியதும் அவசியமானதாகும். இவ்வகையில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை வேறுபடுத்தி இனங்காண்பது நீண்ட நோக்கில் நன்மைகள் பயக்கும். குறிப்பாக இது தொடர்பான தண்டனையளித்தலின் போதும் வேறுபடுத்தி பரிசீலிப்பதற்கு இது மிகவும் துணைபுரியும். எதிர்காலத்தில் இப்பாகுபடுத்தல் மேலும் விரிவடையலாம்.
இச்சட்டத்திலேயே முதற் தடவை யாக "பாலியல் வல்லுறவு" எனும் பதம் தமிழில் பாவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப த்தில் தமிழில் 'கற்பழிப்பு" எனும் பதம் பயன்படுத்தப்பட்டபோது பெண்களுக்கு மட்டுமே கற்பின் தத்துவத்தை வலியுறு த்துவதாக அப்பதம் அமைந்திருந்ததாலும் பொருத்தமில்லாத சொல்லாக இருந்ததாலும் புதிய மாற்றுப் பதம் ஆக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக பெண்ணிலைவாதிகளால் கருத்தாடப்பட்டதைத் தொடர்ந்து "பாலியல் பலாத்காரம்" மற்றும் "பாலியல் வன்முறை" ஆகிய பதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பதத்தை அறிமுகம் செய்ததில் "சரிநிகர்" பத்திரிகைக்கு மிகுந்த பங்குண்டு. ஆனாலும் 'பாலியல் பலாத்காரம்" மற்றும் "பாலியல் வன்முறை" ஆகிய பதங்களில் "பாலியலுறவு" என்பது உள்ளடக்கப்படவில்லை என பல பெண்ணிலைவாதிகளால் பேசப்பட்டது. இந்நிலையில் தமிழீழ ஒறுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிற "பாலியல் வல்லுறவு" எனும் பதத்தில் பாலியல் (ளநஒரயட) + வன்மை (எழைடநnஉந) + உறவு (iவெநசஉழரசஉந) ஆகிய மூன்று விடயமும் உள்ளார்ந்திருப்பதால் இப்பதமே பொருத்தமானது என்பதைப் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். சில வேளைக ளில் இதை விட நல்ல பதம் எதிர் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.
இயற்கைக்கு முரணான பாலியல் உறவு
எவரேனும் ஆணுடன் அல்லது பெண்ணுடன் அல்லது ஏதேனும் விலங்குடன் இயற்கை இயல்புகளுக்கு முரணாக உடலுறவு கொள்ளும் எவரும் 10 ஆண்டுகள் வரை இருவகையிலொருவகை சிறைத் தண்டனையுடன் குற்றக்காசிறுப்புக்ளும் உள்ளாதல் வேண்டும் என கூறுகிறது. (Pஊவுநு -சரத்து-(286))
இதில் 'இயற்கை இயல்புக்கு முரண்" என எதனை வறையறுத்திருக்கின்றனர் என்பதை குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இன்று பெண்களது விடுதலைக்கு தடையாக இருக்கும் முக்கிய ஒரு பிரச்சினையாக பாலியல் சுரண்டல் பாலியல் உறவுக் கட்டுப்பாடு என்பன காணப்படுகிறது. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் பெண்களின் பாலியல் தேவை பாலியல் சுரண்டலிலிருந்து விடுதலையடைதல் என்பன அங்கு புதிதாக விஞ்ஞான ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை பாலியல் புணர்வு முறைகள் அறிமுகமானதிலிருந்து சில வளர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரபு ரீதியிலான கருத்தியல் கட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு இவை வழக்கத்துக்கு வர சில காலமெடுக்கக் கூடும். எனவே இயற்கைக்கு மாறாக உறவு கொள்தல் கூடாது என கூறுவது பெண்களது மட்டுமல்ல ஆண்களி னதும் சுதந்திர இயல்புகளினதும் மீதான மோசகரமான கட்டுப்பாட்டு திணிப்பாகும். பரத்தமை
'பரத்தமை" (விபச்சாரம்) பற்றி இன்னமும் நமது சமூகத்தில் நிலைபெற்றிருக்கிற கருத்தியல் காரணமாக பரத்தமையை குற்றத்திற்குரிய ஒன்றாகவே காண்கிறதே ஒழிய அதற்கான ஒட்டு மொத்தமான சமூக நிர்ப்பந்தத்தை இனங் காண்பதில் தவறிழைத்தே வருகிறது.
பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்குக் காரணமாக பெண்ணின் பாலியல் மேலுணர்வை கொள்ள முடியாது. அதற்கான சமூகச் சூழலே பரத்தமை நிலையினை அடையக் காரணமாக இருக்கிறது. எனவே, அந்தச் சூழல் மாற்றியக்கப்படாதவரை இவற்றிற்கான தீர்வுமில்லை.
''காசு நோக்கத்திற்காக ஒரு பாலார் மறுபாலாருடன் உடலுறவு கொள்ளுதல் 'பரத்தமை" தவறாகும். இத்தவறுக்கு நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இருவகையிலொருவகை சிறையொறுப்பு வழங்கப் படுதல் வேண்டும்." (Pஊவுநு -சரத்து (481),(420))
பரத்தமை விடயத்தில் எப்போதும் பெண்ணே தண்டிக்கப்பட்டு வரும் இயல்பை நாம் காணலாம்.
;;;;''பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?" என வினவுகிறார் பெண்ணிலைவாதிகளில் ஒருவரான சுனிலா அபேசேகர.
இக்கேள்வியின் நியாயத்தன்மை சரியானதே. லஞ்சக் குற்றச்சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கிய வரையும் தண்டிக்கும் இந்த சட்டங்கள் பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை தூண்டும் ஆண்களைத் தப்ப விட்டுவிட்டு பெண்களை மட்டும் தண்டிப்பது மிக மோசமான நடைமுறை.
மேலும் 'விபச்சாரி" அல்லது 'வேசி" என்று இறுதியில்தூற்றப்படும் செய்கை கூட பெண்களுக்கு எதிராக மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இவ்வகையான பதப் பிரயோகம் கூட ஆண் மேலாதிக்க த்தை வெளிப்படுத்தும் பதப் பிரயோ கமே. அப்பதங்களை பெண்கள் மீது மட்டுமே பிரயோகிக்க ஆணாதிக்கம் முயல்கிறது.
ஆண்கள் பல பெண்களுடன் பாலியலுறவில் ஈடுபட்டால் அவனை ''விபச்சாரன்" அல்லது ''பரத்தன்" போன்ற பதங்களைப் பாவிப்பதற்கான தமிழ்ச் சொல் வழக்காடல் இன்னமும் இல்லை. பெண்ணே தொடர்ந்தும் ஏசப்படலுக்குள்ளாகிறாள்.
இப்படி ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்" தயாரிக்கப்படும் போது பெண்கள் தொடர்பான விடயங்களில் அசட்டை யாகவே இருந்துள்ளனர் என ஒடுக்கப் படும் பெண்ணினம் குற்றம் சுமத்துவதை இலகுவாக மறுதலிக்க முடியாதே.
ஒறுப்புச் சட்டத்தில் இதுவரை காணாத பல புதிய நல்ல கருத்துக்களுடன் கூடிய சட்டமியற்றல் நடைபெற்றிருக்கிற போதும் சிற்சில பலவீனங்களை உள்ளடக்கியிருப்பதை உணராது விட முடியாது. அதிலுள்ள "பெண்கள்" பற்றிய சிறு மதிப்பீடு மட்டுமே இதில் அடங்கியிருக்கிறது.
முழுமையாக அவை விமர்சனத்துக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாக வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களாயின் ஆரோக்கியமான நகர்வுக்கு அவை சிறிதளவாவது வழி சமைக்கும்.
(1996 - ஏப்ரல் 20 சரிநிகர்)
மேலும் வாசிக்க...